sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குளிர்பதன கிடங்கில் விளைபொருள் 15 நாள் வைக்க கட்டணம் கிடையாது

/

 குளிர்பதன கிடங்கில் விளைபொருள் 15 நாள் வைக்க கட்டணம் கிடையாது

 குளிர்பதன கிடங்கில் விளைபொருள் 15 நாள் வைக்க கட்டணம் கிடையாது

 குளிர்பதன கிடங்கில் விளைபொருள் 15 நாள் வைக்க கட்டணம் கிடையாது


ADDED : டிச 28, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்,காரமடையில் சிறுமுகை சாலை சாஸ்திரி நகரில், தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு விவசாய விளை பொருட்களை இருப்பு வைக்க குளிர் பதன கிடங்கும், சாதாரண கிடங்குகள் உள்ளன. விளை பொருட்களை தரம் பிரித்து மூட்டைகளாக கட்ட, பெரிய கட்டடம் மற்றும் அறுவடை செய்த விவசாய விளை பொருட்களை காய வைக்க உலர் களங்கள் உள்ளன.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறியதாவது: காரமடையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், சீரமைத்து புது பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 1000 டன் கிடங்குகள் உள்ளன. அறுவடை செய்த விளை பொருட்களை காய வைப்பதற்கு, இரண்டு உலர் களங்கள் உள்ளன.

விளை பொருள் கெடாமல் இருக்க, 50 டன் குளிர்பதன கிடங்கும் உள்ளது.

இருப்பு வைக்கும் விளை பொருட்களுக்கு, 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் இல்லை. அதற்கு மேல் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு குவின்டாலுக்கு, 25 பைசா வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பு வைத்துள்ள விளை பொருட்களுக்கு, 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

இதேபோன்று மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இதில் 500 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கும் உள்ளது. விளை பொருட்களை இருப்பு வைக்க இரண்டு பெரிய கட்டடங்கள் உள்ளன.

எனவே விவசாயிகள் அறுவடை செய்த விளைப் பொருட்களை, இருப்பு வைத்து, விற்பனை செய்ய, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us