/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
/
ஆதிபராசக்தி கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ADDED : செப் 04, 2025 10:55 PM

நெகமம்; நெகமம், ஆதிபராசக்தி அம்பிகை கருப்பண்ணசுவாமி கோவிலில், நேற்று திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
நெகமம், ஆதிபராசக்தி அம்பிகை கருப்பண்ணசுவாமி கோவிலில், திருக்குட நன்னீராட்டு விழா 3ம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, காப்பு கட்டுதல் கோபுரகலசங்கள் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
இதை தொடர்ந்து மாலையில், பக்தர்கள் சுவாமிக்கு முளைப்பாளிகை மற்றும் தீர்த்தம் எடுத்து வந்து வழிபட்டனர். முதற்கால வேள்வி வழிபாடு, 108 மூலிகை வேள்வி நிறைவு, மலர் வழி பாடு, திருமுறை விண்ணப்பம், எண் வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று, காலையில், திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருக்குடங்கள் புறப்பாடும், திருக்குட நன்னீராட்டு விழாவும் நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.