sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்

/

 காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்

 காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்

 காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்


ADDED : டிச 05, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம்நடந்தது.

அதிகாலை மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கால சந்தி பூஜை முடிந்து, திருமங்கையாழ்வார் உற்சவமூர்த்தி, ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியா வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தன.

பின்பு வெள்ளி சப்பரத்தில் வெண் பட்டுக்குடை சூழ, மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் அரங்கநாத பெருமாள் முன், திருமங்கையாழ்வார் வீற்றிருந்தார். அங்கு அவருக்கு மாலை, பரிவட்டம், சடாரி மரியாதை அளிக்கப்பட்டது.

வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் திருமங்கை ஆழ்வார் பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் சடாரி மரியாதை பெற்று ராமானுஜர் சன்னதியை அடைந்தார். உச்சிக்கால பூஜை, சாற்று முறையை அடுத்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us