/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்ற மூவர் கைது 4.2 கிலோ பறிமுதல்
/
கஞ்சா விற்ற மூவர் கைது 4.2 கிலோ பறிமுதல்
ADDED : ஜன 24, 2026 05:11 AM
கோவை: பீளமேடு போலீசார், ஆவாரம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில், பைக்கில் சென்ற ஏரிமேடு பகுதியை சேர்ந்த பிரவீன்,25, நிறுத்தி விசாரித்த போது, கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
* கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார், குனியமுத்துார், இடையர் பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள மாரியம்மன் கோவில் காலியிடத்தில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகேசனை,52, கைது செய்தனர். அவரிடமிருந்து, 2 கிலோ 630 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
* செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதியில் சோதனை நடத்திய போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சத்யபாராதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 150 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

