sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை திருச்சூர் கலெக்டர் உத்தரவு

/

 அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை திருச்சூர் கலெக்டர் உத்தரவு

 அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை திருச்சூர் கலெக்டர் உத்தரவு

 அதிரப்பள்ளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை திருச்சூர் கலெக்டர் உத்தரவு


ADDED : நவ 19, 2025 03:52 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்துள்ளதால், கனரக வாகனங்கள் செல்ல, திருச்சூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர்.

அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் மலைப்பாதையில் யானைக்காயம் அருகே, கும்மட்டியில் ஒரு மதகு பாலம் இடிந்து விழுந்ததாலும், சாலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளதாலும், நேற்று முன்தினம் (17ம் தேதி) முதல் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவிக்கு எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கேரளாவில் வரும் டிசம்பர் மாதம், 11ம் தேதி உள்ளாச்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வால்பாறையில் இருந்து, அதிரப்பள்ளி வரும் வழியில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ரோட்டை வரும், 22ம் தேதிக்குள் பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும்.

அது வரை, இருமாநிலத்தில் இருந்தும் இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் சாலை சேதமடைந்த பகுதியில் பயணியரை இறக்கவிட்டு, மறுபுறத்தில் மீண்டும் பயணியை ஏற்றி செல்லாம். சுற்றுலா வாகனங்களும் இந்த நடைமுறையை பின்பற்றி வழக்கம் போல் அதிரப்பள்ளி அருவி வழியாக சாலக்குடிக்கு செல்லாம்.

சாலை சீரமைக்கும் பணி நிறைவடைந்த பின், வால்பாறை - அதிரப்பள்ளி இடையே வழக்கம் போல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us