sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புலி வருது, புலி வருது! காரமடை வனத்தில் கணக்கெடுப்பு... மான், காட்டெருமை குறித்தும் ஆய்வு

/

புலி வருது, புலி வருது! காரமடை வனத்தில் கணக்கெடுப்பு... மான், காட்டெருமை குறித்தும் ஆய்வு

புலி வருது, புலி வருது! காரமடை வனத்தில் கணக்கெடுப்பு... மான், காட்டெருமை குறித்தும் ஆய்வு

புலி வருது, புலி வருது! காரமடை வனத்தில் கணக்கெடுப்பு... மான், காட்டெருமை குறித்தும் ஆய்வு


ADDED : ஜன 06, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடையில் அடர்ந்த வனப்பகுதியில் தினமும், 9 கி.மீ., சென்று புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள, ஏழு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த 3ம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி எட்டு நாட்கள் நடக்க உள்ளது.

சேகரிக்கப்படும் மாதிரிகளை கணக்கில் கொண்டு, புலிகள் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

இதன் ஒருபகுதியாக, கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காரமடை வனச்சரகத்தில் கடந்த 3ம் தேதி புலிகள் கணக்கெடுக்கும் பணி, காரமடை வனச்சரகர் ரஞ்சித் தலைமையில் துவங்கியது.

இதில், தன்னார்வலர்கள், வனத்துறையினர் என, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் 6 குழுக்களாக பிரிந்து, மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்திக்கடவு, கொரவன்கண்டி, பில்லுார் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், ''தினமும் 9 கி.மீ., வரை சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. காலையில் 2 கி.மீ., நடந்து சென்று புலிகள் நடமாட்டம், அதன் கால் தடங்கள், வந்து சென்ற பிற அடையாளங்கள் சேகரிக்கப்படும். அடுத்ததாக, மதியம் 5 கி.மீ., சென்று நடமாட்டம் குறித்து ஆராயப்படும். மீண்டும் 2 கி.மீ., நீர்நிலைகள் பகுதிகளுக்கு சென்று ஆராயப்படும். ''இந்த கணக்கெடுப்பில் புலிகள் மட்டும் அல்ல; புலிகள் வேட்டையாட தேவையான அளவு மான்கள், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளனவா எனவும் கணக்கெடுப்போம்.

யானைகள் எண்ணிக்கையும் கணக்கெடுக்கிறோம். அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் வந்து சென்ற தடயத்தை வைத்து, அதாவது யானைகளின் சாணம், அதன் கால் தடங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது,'' என்றார்.-------






      Dinamalar
      Follow us