sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவையின் முதல் 4 மாடி வீடுகள்

/

 கோவையின் முதல் 4 மாடி வீடுகள்

 கோவையின் முதல் 4 மாடி வீடுகள்

 கோவையின் முதல் 4 மாடி வீடுகள்


ADDED : நவ 18, 2025 04:31 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ ன்றைய கோவையில், மெத்தை வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அனுமதி கிடைப்பது அரிது. மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதைத் தடுக்கும், இத்தகைய சட்டங்கள் ஊர் சட்டம்' என வகுக்கப்பட்டன.

இரண்டடுக்கு வீடு கட்டுமானத்துக்கும், மேற்பூச்சு பூசுவதற்கும் கூட அரசின் அனுமதி தேவைப்பட்டதால், ஊரெங்கும் ஓட்டு வீடுகளே ஆதிக்கம் செலுத்தின.

அனுமதி பெற்று மெத்தை வீடு கட்டியவர்கள், அந்தப் பகுதியில் செல்வந்தர்கள் என எளிதில் அடையாளம் காணப்பட்டனர். கோவை போன்ற நகரங்களிலும், ஆங்கிலேயர் வருகை தரும் வரையிலும் அரண்மனைகள், ஆலயங்கள் மட்டுமே உயர்ந்த கட்டடங்களாக இருந்தன. எங்கும் ஓட்டு வீடுகளே பொதுவானது. ஆங்கிலேயர்கள் வந்த பின்பே, மெல்ல, மெல்ல நகரத்தின் உருவம் மாறத் தொடங்கியது. 1850ம் ஆண்டு வரை, கோவையில் இருந்த மெத்தை வீடுகள் வெறும் நான்கு மட்டுமே. அவை, ராஜவீதியில் ஜாகிர்தாரரின் வீடு, வைசியாள் ஆற்காடு தொப்பையப்ப முதலியாரின் வீடு, ரங்கே கவுடர் வீதியில் ரங்கே கவுடரின் இரட்டை அடுக்கு வீடு, சுக்ரவார் பேட்டையில் லிங்கப்ப செட்டியாரின் வீடு.

ஈட்டி தூண்களும், தேக்கு விட்டங்களும் கொண்டு கட்டப்பட்ட லிங்கப்ப செட்டியாரின் வீட்டில், ஒரு காலத்தில் கோவை நகர சபை பள்ளி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us