sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரளிக்காடுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

/

பரளிக்காடுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

பரளிக்காடுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

பரளிக்காடுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்


ADDED : ஜன 20, 2025 06:13 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து, பரளிக்காடு சூழல் சுற்றுலாக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .

பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள் https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து தான் வரவேண்டும். நேரடியாக வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.

பரளிக்காடு சூழல் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல் என வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பரளிக்காடு உள்ளது.

தற்போது பொங்கல் விடுமுறை காரணமாக பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் கடந்த 15, 17, 18, 19ம் தேதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் சூழல் சுற்றுலாவுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில் 'இதுவரை சனி மற்றும் ஞாயிறு செயல்பட்டு வந்த சூழல் சுற்றுலா இனி அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us