/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.97 கோடிக்கு வர்த்தகம்
/
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.97 கோடிக்கு வர்த்தகம்
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.97 கோடிக்கு வர்த்தகம்
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.97 கோடிக்கு வர்த்தகம்
ADDED : அக் 03, 2025 09:26 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 1.97 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது.
பொள்ளாச்சியில் விவசாயிகள் விளைபொருட்களை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த மாதம், ஒரு கோடியே, 97 லட்சத்து, 83 ஆயிரத்து, 850 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 6 லட்சத்து, 59 ஆயிரத்து, 461ரூபாய் மதிப்புள்ள, 15,489.83 கிலோ காய்கறிகள் வரத்து இருந்தது.
ஒரு நாளுக்கு, 62 விவசாயிகளும், 3,097 நுகர்வோர்களும் வந்தனர்.கடந்த மாதம் மொத்தம், 464.7 டன் காய்கறி வரத்து இருந்தது. மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 97 லட்சத்து, 83 ஆயிரத்து, 850 ரூபாயாகும். மொத்தம், 1,878 விவசாயிகள், 92,939 நுகர்வோர்கள் பயன்பெற்றனர்,' என்றனர்.