/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரம்பரிய உணவு திருவிழா போட்டி
/
பாரம்பரிய உணவு திருவிழா போட்டி
ADDED : அக் 15, 2024 10:09 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிணத்துக்கடவு வட்ட அளவிலான 'ரத்த சோகை இல்லாத கிராமம்' குறித்த பிரசாரம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் நடந்தது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் பலர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், மகளிர் திட்டம் வாயிலாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு சமைத்தல் மற்றும் சிறுதானிய பயிர்களை ஊக்குவித்தல் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுவினர் சமைத்த சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். இதில், தாசில்தார் கணேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்குமார், உதவி திட்ட அலுவலர் லதா, வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு, சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு பரிசோதித்தனர்.
உணவு திருவிழாவில் வெற்றி பெற்ற குழுவினருக்கு, முதல் பரிசாக, 2,500, இரண்டாம் பரிசு 2,000, மூன்றாம் பரிசு, 1,500 ரூபாய் என வழங்கப்பட்டது.