/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஜி.எப்.ஐ., தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சி
/
எஸ்.ஜி.எப்.ஐ., தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சி
ADDED : ஜன 10, 2024 12:45 AM
கோவை:எஸ்.ஜி.எப்.ஐ.,யின் தேசிய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அப்போட்டிகளில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர் - வீராங்கனைகள், போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளித்து போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, ஜன.,9ம் தேதி முதல் 28ம் தேதி வரை பாட்னாவில் நடக்கிறது.
இதில், பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி சார்பில் தங்கும் வசதி மற்றும் உணவுடன், பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
கிரிக்கெட் நெட் திறப்பு விழா
பள்ளி சார்பில் மாணவர்கள் மற்றும் இளம் வீரர்களின் மேம்பாட்டுக்காக, புதிதாக 'கிரிக்கெட் நெட்' அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, கடந்த 5ம் தேதி நடந்தது.
முன்னாள் தமிழக அணி வீரரும், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி முன்னாள் மாணவருமான கண்ணன், கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் பயிற்சி மைதானத்தை திறந்து வைத்தனர்.

