/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நண்பர் மீது தாக்குதல் இருவருக்கு சிறை
/
நண்பர் மீது தாக்குதல் இருவருக்கு சிறை
ADDED : ஜன 21, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: குனியமுத்துாரை சேர்ந்தவர், முகமது ரஷித், 26. இவரது நண்பர் கரும்புக்கடையைச் சேர்ந்த முகமது யாகூப், 26. முகமது ரஷித், முகமது யாகூப் மனைவியுடன் பேசியுள்ளார். இது முகமது யாகூப்புக்கு பிடிக்கவில்லை. நேற்று முன்தினம் முகமது ரஷித்தை தனியாக பேச வேண்டும் என, முகமது யாகூப் அழைத்தார்.
பைக்கில் இருவரும் தெற்கு உக்கடம் ஜி.எம். நகருக்கு வந்தனர். அங்கு முகமது யாகூப் பின் நண்பர் முகமது அசார், 26 என்பவரும் இருந்தார். தனது மனைவியுடன் பேசுவதற்கான காரணத்தை கேட்டு, முகமது யாகூப் தாக்கினார். அவருடன் முகமது அசாரும் சேர்ந்து தாக்கினார். கடைவீதி போலீசார் முகமது யாகூப், முகமது அசாரை சிறையில் அடைத்தனர்.

