sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இருசக்கர வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி

/

இருசக்கர வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி

இருசக்கர வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி

இருசக்கர வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி


ADDED : மே 09, 2025 05:41 AM

Google News

ADDED : மே 09, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தடாகம் பகுதியை சேர்ந்த பரத்குமார், 19; தனது இரு சக்கர வாகனத்தில், லாலி ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 'ஜீப்' ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பரத்குமாரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட பரத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், பி.என்., புதுார், கோகுலம் காலனியை சேர்ந்தவர் புகழேந்தி, 21; தனது நண்பரான சரண், 22 என்பவருடன் வடவள்ளியில் இருந்து கணுவாய் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சரண் ஓட்டிச்சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கிருந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சரணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரு விபத்துகள் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us