sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு

/

அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு

அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு

அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு


ADDED : அக் 16, 2024 10:10 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: அங்கக வேளாண்மையில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில், உயிர் உரங்களின் பயன்பாடு முக்கியமானது என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அங்கக வேளாண்மையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான உயிர் உரங்களின் விலை குறைவானவை. அதே சமயம் மண்ணில் ஊட்டச்சத்துகளின் சுழற்சிக்கு பெரும் ஆதாரமாக விளங்குகிறது. பொதுவாக, வளிமண்டல தழைச்சத்தை கிரகித்து, மண்ணில் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள், மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள மணி மற்றும் சாம்பல் சத்துக்களை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாக்கள், பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகள் என உயிர் உரங்கள் பல வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றை விதை நேர்த்தியாகவும், அல்லது நடவு வயலில் மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடுவதன் வாயிலாகவும் பெறலாம்.

பொதுவாக பண்ணை கழிவுகள் அளவில் அதிகமாகவும், குறைந்த சத்துக்களை கொண்டிருக்கும். ஆகையால் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் பண்ணை கழிவுகளை கிளரிரீசிடியா, அகத்தி போன்ற பசுந்தாழ் இலைகள், மாட்டு சாணம் மற்றும் கோமியம், நுண்ணுயிர் கலவைகள் ஆகியவற்றை பயன்படுத்தி மக்கச் செய்து பிறகு செறிவூட்டிப் பயன்படுத்தலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us