/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி வரத்து மாற்றமில்லை விலை உயர்வால் மகிழ்ச்சி
/
காய்கறி வரத்து மாற்றமில்லை விலை உயர்வால் மகிழ்ச்சி
காய்கறி வரத்து மாற்றமில்லை விலை உயர்வால் மகிழ்ச்சி
காய்கறி வரத்து மாற்றமில்லை விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : ஜன 07, 2025 02:05 AM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து மாற்றமில்லாத நிலையில், விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநில வியாபாரிகள் வருகை உள்ளதால், விலை அதிகம் கிடைக்கிறது. அதனால், விவசாயிகள் இங்கு விளைபொருட்களை கொண்டு வர ஆர்வம் காட்டுகின்றனர்.
மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ) பெட்டி - 250, ஒரு தேங்காய் -- - 23, கத்தரிக்காய் கிலோ -- 30, வெண்டைக்காய் --- 40, முள்ளங்கி --- 25, வெள்ளரிக்காய் --- 22, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 12, பாகற்காய் --- 40, புடலை --- 30, சுரைக்காய் --- 20, பீர்க்கன்காய் -- 60, பீட்ரூட் --- 30, அவரைக்காய் --- 55, பச்சை மிளகாய் --- 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, தற்போது தக்காளி (பெட்டி) -- 30, ஒரு தேங்காய் --- 3, கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்- கிலோ - 10, பூசணிக்காய் மற்றும் பாகற்காய் -- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. முள்ளங்கி கிலோ -- 8, வெள்ளரிக்காய் மற்றும் சுரைக்காய் --- 10, அரசாணிக்காய் --- 3, பீட்ரூட் --- 15 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'இந்த வாரமும் மார்க்கெட்டில் முருங்கைக்காய் வரத்து இல்லை. பொங்கல் பண்டிகையையொட்டி காய்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.