/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.8 கோடி மதிப்புள்ள காய்கறி உழவர் சந்தையில் விற்பனை
/
ரூ.1.8 கோடி மதிப்புள்ள காய்கறி உழவர் சந்தையில் விற்பனை
ரூ.1.8 கோடி மதிப்புள்ள காய்கறி உழவர் சந்தையில் விற்பனை
ரூ.1.8 கோடி மதிப்புள்ள காய்கறி உழவர் சந்தையில் விற்பனை
ADDED : மே 02, 2025 08:42 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 1.80 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானது.
பொள்ளாச்சி உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்துகின்றனர். இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த மாதம் உழவர் சந்தைக்கு நாளொன்றுக்கு, ஆறு லட்சத்து, ஓராயிரத்து, 429 ரூபாய் மதிப்புள்ள, 15,683 கிலோ காய்கறிகள் வந்தன. ஒரு நாளுக்கு, 60 விவசாயிகளும், 3,136 நுகர்வோர்களும் வந்தனர்.
மொத்தம், 470.5 டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 80 லட்சத்து, 42 ஆயிரத்து, 875 ரூபாயாகும். மொத்தம், 1,802 விவசாயிகள் பங்கேற்றனர்; 94,098 நுகர்வோர்கள் வருகை புரிந்தனர்,'' என்றனர்.