/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் ஏப்.,4 - 6 வரை வாகனங்களில் செல்ல தடை
/
மருதமலையில் ஏப்.,4 - 6 வரை வாகனங்களில் செல்ல தடை
ADDED : மார் 30, 2025 11:02 PM
கோவை; மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஏப்., 4 முதல், 6 வரை மலை மீது, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல, பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும், 4ம் தேதி திருக்குடநன்னீராட்டு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, ஏப்.,1 மாலை 5:00 மணிக்கு மேல், திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில், சக்தி கலசங்களை யாகசாலையில் வைத்து பூஜை செய்கின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
மீண்டும் ஏப்.,4ல், திருக்குட நன்னீராட்டு விழா முடிந்ததும், வழக்கமான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
வரும் ஏப்., 4 முதல், 6 வரை மலை மீது, வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் படி வழியாகவும், திருக்கோவில் பஸ் வாயிலாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.