sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீர்நிலைகளில் மண் கடத்தல் கிராம மக்கள் புகார் மனு

/

நீர்நிலைகளில் மண் கடத்தல் கிராம மக்கள் புகார் மனு

நீர்நிலைகளில் மண் கடத்தல் கிராம மக்கள் புகார் மனு

நீர்நிலைகளில் மண் கடத்தல் கிராம மக்கள் புகார் மனு


ADDED : ஜூன் 20, 2025 02:43 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அருகே நீர்நிலைகளில் இருந்து, இரவு நேரங்களில் கிராவல் மண் திருடப்பட்டும், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் மற்றும் இதர கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து இரவு நேரங்களில், கிராவல் மண் கடத்தப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறைக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ராமச்சந்திராபுரம் உப்பாறு ஓடை, பெருமாள் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து இரவு நேரங்களில், கிராவல் மண் கடத்துகின்றனர். இது குறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

நாள்தோறும் நுாற்றுக்கணக்கான லோடு மண் அள்ளப்படுவதால், நீர்நிலைகள் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது; மழைக்காலங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும், கனரக வாகனங்களை கொண்டு மண் கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us