sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வரும் 17ல் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை

/

 வரும் 17ல் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை

 வரும் 17ல் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை

 வரும் 17ல் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை


ADDED : நவ 13, 2025 09:16 PM

Google News

ADDED : நவ 13, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவிலில், விஷ்ணுபதி புண்ணியகால பூஜை வரும், 17ம் தேதி நடக்கிறது.

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு முன் வைக்க வேண்டும்.

இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் மனதார வழிபட்டு எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் வழிபட்டால், நிலம், வீடு வாங்க அருள் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மஹா விஷ்ணு புண்ணிய கால பூஜை வரும், 17ம் தேதி நடக்கிறது. அன்று, அதிகாலை, 2:30 மணிக்கு பெருமாளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. காலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ேஹாமம், பஞ்ச சூக்த ேஹாமம், அஷ்டலட்சுமி ேஹாமங்கள் நடக்கிறது.

டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை,4:45 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:40 மணி முதல், இரவு, 7:40 மணி வரையிலும் பிரகாரத்தை வலம் வரலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், பிரதோஷத்தை முன்னிட்டு மாலை, 5:00 மணிக்கு யோக நரசிம்மருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us