sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

/

சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்


ADDED : அக் 31, 2024 10:01 PM

Google News

ADDED : அக் 31, 2024 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே, சர்வீஸ் ரோட்டின் ஓரம் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு ஆத்துப்பொள்ளாச்சியில் இருந்து, கிணத்துக்கடவு வழியாக ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.

கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில், குழாயில் கசிவு ஏற்பட்டு, கடந்த 2 மாதங்களாக நடைபாதையில் குடிநீர் வழிந்தோடுகிறது.

மேலும், இங்கு அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது, அதே இடத்தில் தண்ணீர் கசிவு அதிகரித்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிதாகி ரோடும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதை கவனித்து குடிநீர் வீணாவதை தடுத்து, உடனடியாக சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் கூறியதாவது:

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், அடிக்கடி குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ரோட்டில் வழிந்தோடுகிறது. புகார் தெரிவிக்கும் போது, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாகவே சரி செய்து வருகின்றனர்.

மேலும், கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், குறிச்சி, குனியமுத்துார் செல்லும் குழாயில் குடிநீர் வீணாகி கால்வாயில் ஓடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு, குடிநீர் கசிவை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us