ADDED : நவ 07, 2025 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தொண்டாமுத்துார், பார்பர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு நாகதேவி,32, என்ற மனைவியும், யாத்தீஸ்வரன்,12, ஸ்ரீ மதி,7, ஆகிய குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக, கோபித்துக் கொண்டு சீரநாயக்கன் பாளையத்திலுள்ள பெற்றோர் வீட்டிற்கு நாகதேவி குழந்தைகளுடன் வந்துள்ளார்.
நாகதேவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல செந்தில்குமார் வந்திருக்கிறார். அப்போது மூவரையும் காணவில்லை. புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

