sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீவிரம் குறைந்த பருவமழை: விவசாய பணிகள் தீவிரம்

/

தீவிரம் குறைந்த பருவமழை: விவசாய பணிகள் தீவிரம்

தீவிரம் குறைந்த பருவமழை: விவசாய பணிகள் தீவிரம்

தீவிரம் குறைந்த பருவமழை: விவசாய பணிகள் தீவிரம்


ADDED : நவ 02, 2025 08:33 PM

Google News

ADDED : நவ 02, 2025 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இந்நிலையில் கடந்த மாதம், 16ம் தேதி வடகிழக்குப் பருவமழை துவங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன் சோலையாறு அணை எட்டாவது முறையாக நிரம்பியது.

இதேபோன்று, ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஐப்பசி மற்றும் கார்த்திகை பட்டத்தில் மானாவாரி நிலத்தில் கால்நடை தீவன பயிர்கள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us