sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமண ஆல்பம் தர மறுப்பு; இழப்பீடு வழங்க உத்தரவு

/

திருமண ஆல்பம் தர மறுப்பு; இழப்பீடு வழங்க உத்தரவு

திருமண ஆல்பம் தர மறுப்பு; இழப்பீடு வழங்க உத்தரவு

திருமண ஆல்பம் தர மறுப்பு; இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : டிச 12, 2024 11:39 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; திருமண நிகழ்ச்சி ஆல்பம் தர மறுத்ததால், பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவைபுதூர், ஜாமியா நகர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், 2021ல் நடந்த இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ மற்றும் போட்டோ எடுக்க, சாய்பாபா காலனியிலுள்ள கிளம்ஸ் ஸ்டூடியோவில் ஆர்டர் கொடுத்தார்.

இதற்காக, 55,000 ரூபாய் செலுத்தினார். ஆனால், திருமணம் முடிந்து பல மாதங்களாகியும் வீடியோ மற்றும் போட்டோ ஆல்பத்தை வழங்கவில்லை. மேலும், 25,000 ரூபாய் கொடுத்தால் ஆல்பம் தருவதாக தெரிவித்தனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த விஜயலட்சுமி, திருமண நிகழ்ச்சி ஆல்பம் மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரருக்கு திருமண ஆல்பத்தை உடனடியாக வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us