sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின் விபத்து தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? பொதுமக்களுக்கு மின் வாரியம் விளக்கம்

/

மின் விபத்து தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? பொதுமக்களுக்கு மின் வாரியம் விளக்கம்

மின் விபத்து தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? பொதுமக்களுக்கு மின் வாரியம் விளக்கம்

மின் விபத்து தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? பொதுமக்களுக்கு மின் வாரியம் விளக்கம்


ADDED : மே 18, 2025 10:59 PM

Google News

ADDED : மே 18, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பருவ மழையால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

n மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்லாதீர்.

n இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக்கயிறு கட்டி, துணி காய வைக்கும் செயலை தவிர்க்கவும்.

n இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய, மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.

n இடி அல்லது மின்னலின்போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

n மின் கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.

n ஈரமான கைகளோடு ஸ்விட்சை உபயோகப்படுத்த வேண்டாம்.

n புதிய கட்டட பணி மேற்கொள்ளும்போது, அருகில் செல்லும் மின் கம்பிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

n மின் கம்பிகளுக்கு அருகே, உலோகப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

n புதை மின் வடம் செல்லும் இடத்தில், நிலத்தை துளையிடுதல் அல்லது நிலத்தை தோண்டுவதை தவிர்ப்பது நல்லது.

n மின் தடை ஏற்பட்டால், 94987 94987 என்ற எண்ணில், புகாரை பதிவு செய்ய வேண்டும்.

இத்தகவலை, கோவை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us