sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குவது எப்போது

/

கோவில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குவது எப்போது

கோவில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குவது எப்போது

கோவில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குவது எப்போது


ADDED : செப் 16, 2025 09:55 PM

Google News

ADDED : செப் 16, 2025 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்காததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு, கோதவாடி மாரியம்மன், விநாயகர் கோவில் பழமையானது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் கோபுர சிற்பங்களும், கோவிலில் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்து, 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து, நலிவடைந்த கோவில்கள் பட்டியலில் சேர்த்து, கோவில் புனரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

ஆனால், ஒரு ஆண்டு கடந்தும் இந்த கோவிலுக்கு தற்போது வரை நிதி ஒதுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, கோவிலை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us