sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரவலாக பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

/

பரவலாக பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

பரவலாக பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

பரவலாக பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : செப் 24, 2024 11:42 PM

Google News

ADDED : செப் 24, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. தொடர் மழையின் காரணமாக, ஜூலை 19ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து கனமழையால், ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக வால்பாறையில் மழைப்பொழிவு இன்றி, வெயில் நிலவியது. நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்தது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 639 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 420 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை, வால்பாறையில் - 34, சோலையாறு - 28, மேல்நீராறு - 33, கீழ்நிராறு - 15 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us