sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீரவில்லை காட்டு யானை தொல்லை

 தீரவில்லை காட்டு யானை தொல்லை

 தீரவில்லை காட்டு யானை தொல்லை


ADDED : டிச 04, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2025 08:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: கோவை புறநகர் வடக்கு பகுதியில் சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

யானைகளின் வரவை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை.

நேற்று முன்தினம் இரவு, சின்னதடாகம் வட்டாரம் வீரபாண்டி ரோட்டில் உள்ள தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தின.

விவசாயிகள் கூறுகையில், 'யானை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு வனத்துறையினரால் வழங்கப்படும் நஷ்ட ஈடு குறைவாக உள்ளது.

எங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டாம். வனவிலங்குகள் வேளாண் நிலத்துக்குள் புகாமல் இருந்தாலே போதும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us