sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்நடை தீவனத்தை ருசித்த காட்டு யானை

/

கால்நடை தீவனத்தை ருசித்த காட்டு யானை

கால்நடை தீவனத்தை ருசித்த காட்டு யானை

கால்நடை தீவனத்தை ருசித்த காட்டு யானை


ADDED : அக் 22, 2025 10:03 PM

Google News

ADDED : அக் 22, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேணுகாபுரம் பகுதியில் காட்டு யானை, தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கால்நடை தீவனங்களை ருசித்து சாப்பிட்டது.

கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், இதுவரை காட்டு யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

அங்குள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரேணுகாபுரத்தில் தோட்டத்தில் ஆடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களை ஒற்றை யானை தின்றது. மறுநாளும் அதே பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us