/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தாயுமானவர்' திட்டத்துக்கான ஊக்கத்தொகை கிடைக்குமா?
/
'தாயுமானவர்' திட்டத்துக்கான ஊக்கத்தொகை கிடைக்குமா?
'தாயுமானவர்' திட்டத்துக்கான ஊக்கத்தொகை கிடைக்குமா?
'தாயுமானவர்' திட்டத்துக்கான ஊக்கத்தொகை கிடைக்குமா?
ADDED : மார் 03, 2026 05:58 AM
- நமது நிருபர் -: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை கிளை மகா சபை கூட்டம், சி.ஐ. டி.யு., அலுவலகத்தில் நடந்தது. நிர்வாகி வேலுசாமி தலைமை வகித்தார்.
'தாயுமானவர்' திட்டத்தை செயல்படுத்த, ஒரு கிளஸ்டருக்கு, 200 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை; உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு, டேபிள், சேர், மின்விசிறி வசதிகளை செய்ய வேண்டும்.
தேவை பட்டியலை பெற்று, அதற்கு ஏற்ப மளிகை பொருட்களை அனுப்ப வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பண்டகசாலை நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

