sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குமரன் குன்றில் மண்டபம் கட்டும் பணி துவக்கம்

/

குமரன் குன்றில் மண்டபம் கட்டும் பணி துவக்கம்

குமரன் குன்றில் மண்டபம் கட்டும் பணி துவக்கம்

குமரன் குன்றில் மண்டபம் கட்டும் பணி துவக்கம்


ADDED : டிச 13, 2024 09:23 PM

Google News

ADDED : டிச 13, 2024 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;குமரன் குன்று கோவிலில், 75 லட்சம் ரூபாயில் மண்டபம் கட்டும் பணி நேற்று தொடங்கியது.

அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது.

குன்றின் மீது உள்ள கோவிலில் மண்டபம் கட்ட, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை இதற்கு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, 75 லட்சம் ரூபாயில், சுற்றுப் பிரகாரத்தில் மண்டபம் கட்டும் பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார் பணியை துவக்கி வைத்தார்.

அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், சரோஜினி, பழனிச்சாமி, ராமச்சந்திரன், முன்னாள் அறங்காவலர்கள், ஊராட்சித் தலைவர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us