/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
/
ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
ADDED : டிச 17, 2024 10:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு கடந்த, 2016ல் கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கரை கோர்ட வசம் ஒப்படைத்தது. இதை தொடர்ந்து, 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றம் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் உள்ளேயே கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நிதி கேட்டு பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், தமிழ அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக, 14 கோடியே, 59 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிட்டார்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களாக கோர்ட் வளாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதில், கோர்ட் வளாகத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், தளம், கார் பார்க்கிங் மற்றும் ரோடு சமப்படுத்தி கிராவல் மண் கொட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.