sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 எஸ்.எஸ்.கோவில் வீதி சந்திப்பில் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

/

 எஸ்.எஸ்.கோவில் வீதி சந்திப்பில் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

 எஸ்.எஸ்.கோவில் வீதி சந்திப்பில் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

 எஸ்.எஸ்.கோவில் வீதி சந்திப்பில் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்


ADDED : நவ 22, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோவில் வீதியில் புதிய தரை மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது.

பொள்ளாச்சி, ராஜாமில் ரோடு பகுதியையொட்டி வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்கள், எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக கோவில்கள், கடைவீதிக்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். இங்கு இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டது.

இரு மாதங்களாகியும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இவ்வழியாக செல்ல முடியாததால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், குழியையொட்டி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது.

இது குறித்து, கடந்த, 6ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், ஆய்வு செய்து, பாலப்பணிகளை வேகப்படுத்த நகராட்சி கமிஷனரிடம் கூறினார். இந்நிலையில், பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கூறுகையில், 'பாலம் கட்டும் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us