ADDED : மார் 17, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளிகள் நேற்று முன்தினம் பைக்கில் சென்றனர்.
அப்போது, மின் கம்பத்தில் மோதி பைக் தீப்பிடித்து எரிந்தது. அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புத்து பரிகா,31, பாசந்தா பிசி,28 ஆகிய இரு தொழிலாளர்களும் பலத்த தீக்காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், புத்து பரிகா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.