sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை

/

சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை

சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை

சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை


ADDED : அக் 10, 2025 10:34 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை, சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில், நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ளது கவர்க்கல் டீ எஸ்டேட். இங்கிருந்து, 12 கி.மீ., தொலைவில் சக்தி - தலநார் எஸ்டேட் அமைந்துள்ளது. சக்தி, தலநார், பிளண்டிவேலி, மகாலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 25 கி.,மீ., பயணித்து வால்பாறை நகருக்கு செல்ல வேண்டியுள்ளது.

சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.

தொழிலாளர்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சக்தி - தலநார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுளாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இப்பகுதியில் மருத்துவமனை இல்லாததால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, தலநார் அரசு துவக்கப்பள்ளி அருகில், நகர்புற துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us