sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கிராம சபை கூட்டம்

/

ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கிராம சபை கூட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கிராம சபை கூட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள்; வெறிச்சோடிய கிராம சபை கூட்டம்


ADDED : மார் 30, 2025 10:57 PM

Google News

ADDED : மார் 30, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு சென்றதால், கிராம சபை கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 29ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தி இருந்தது.

அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், 29ம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும் கூட்டம் துவங்கியது. ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் கஞ்சப்பள்ளி உள்பட பல ஊராட்சிகளில், கிராம சபை கூட்டத்திற்கு மிகக் குறைந்த நபர்களே வந்திருந்தனர்.

ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஜன., 5ம் தேதி முடிந்த பிறகு கூட்டம் நடத்துவதில் அதிகாரிகளுக்கு அதிக ஆர்வம் இல்லை. கிராம சபை கூட்டம் நடக்கும் அதே நேரத்தில் தி.மு.க., சார்பில் கரியாம்பாளையம், கணேசபுரம் மற்றும் பசூரில் 100 நாள் திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் நிலுவை சம்பளம் பெற்று தரப்படும் என தி.மு.க.,வினர் தெரிவித்ததை அடுத்து கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம் உள்பட பல ஊராட்சிகளில் இருந்து 100 நாள் திட்டத் தொழிலாளர்கள் தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டத்துக்கு சென்று விட்டனர். இதனால், பல ஊராட்சிகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது.

'அரசு விரைவில் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்' என, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். முழுமையாக துாய்மைப்படுத்தி வழங்க வேண்டும்' என, கூட்டத்தில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us