/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக பிராமணர் நல சங்க வர்த்தக மாநாடு
/
உலக பிராமணர் நல சங்க வர்த்தக மாநாடு
ADDED : செப் 07, 2025 07:13 AM

சென்னை: உலக பிராமணர்கள் நல சங்கத்தின், எட்டாம் ஆண்டு பிராமணருக்கான வர்த்தக மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.
சுந்தரம் பைனான்ஸ் அதிகாரி சுதர்ஷன் பேசுகையில், ''ஒரு சமுதாயம் தன்னை சரி செய்து கொள்ள ஐந்து விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.
தன்னை மேம்படுத்துவது; தன் குடும்பத்தை மேம்படுத்துவது; தன்னை சார்ந்த சமுதாயத்தை மேம்படுத்துவது; அந்த சமுதாயத்தால் தேசத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்துவது; அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு செல்வது. இவற்றுக்கு ஒரு செயல் திட்டம் அவசியம்,'' என்றார். வர்த்தகத்தில் சிறந்த சேவையாற்றிய 8 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
உலக பிராமணர் நல சங்க, வர்த்தக மன்ற 'லோகோ' வெளியீட்டு விழாவில் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் தலைமை மேலாண் இயக்குனர் முரளி மலையப்பன், எம்.எம்., போர்ஜிங் நிறுவன தலைமை மேலாண் இயக்குனர் வித்யாசங்கர், மணலி பெட்ரோகெமிக்கல் மேலாண் இயக்குனர் சந்திரசேகர், இலங்கை, கேபிடல் மகாராஜா குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் பேசினர்.
சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் பஞ்சாபகேசன், மங்கள் தீப் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீமுகா நிறுவன மேலாண் இயக்குனர் ஹரிஹரன் ராமமூர்த்தி ஆகியோரை, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ''ஜாதி வெறி தவறு. ஜாதி உணர்வு இருக்க வேண்டிய ஒன்று. கலாசாரம், பண்பாடு, தொண்டு ஆகியவை கொண்டு செல்ல வர்த்தகம் மிக அவசியம். கல்லுாரி மாணவர்களுக்கு நாம் உந்து சக்தியாக விளங்க வேண்டும்,'' என்றார்.
விழாவில், சங்க தலைவர் சிவநாராயணன், துணை தலைவர் சிவகுமார், பொதுச் செயலர் சுந்தரம் சேஷாத்திரி, பொருளாளர் ஹரிபாஸ்கர், ஒருங்கிணைப்பு செயலர் விஜயகுமார், உறுப்பினர் நமஸ்தே கிருஷ்ணன், சிட்டி யூனியன் வங்கி வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.