sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர் சக்கரத்தில் உப்பு கொட்டி வழிபாடு

/

தேர் சக்கரத்தில் உப்பு கொட்டி வழிபாடு

தேர் சக்கரத்தில் உப்பு கொட்டி வழிபாடு

தேர் சக்கரத்தில் உப்பு கொட்டி வழிபாடு


ADDED : மார் 08, 2024 12:21 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இரண்டாம் நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. தேர் சக்கரத்துக்கு உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த மாதம், 19ம் தேதி கம்பம் நடுதல் மற்றும், 28ம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த, 1ம் தேதி முதல் கடந்த, 5ம் தேதி வரை விரதமிருந்த பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் வெள்ளி தேரோட்டம் துவங்கியது.

12 அடி உயரம் உள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரம் உள்ள வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கோவிலில் இருந்து மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் முதல்நாள் தேர்நிலை நிறுத்தப்பட்டது. அங்கு பக்தர்கள், தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து, நேற்று வெங்கட்ரமணன் வீதி, உடுமலை ரோடு வழியாக சென்று சத்திரம் வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று (மூன்றாம் நாள்) கோவிலில் தேர் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. நாளை, (9ம் தேதி) அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், வரும், 11ம் தேதி மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us