ADDED : நவ 28, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை, வேலாண்டிபாளையம், மணியக்காரர் நகரை சேர்ந்தவர் கனகராஜ்,53. இவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார்.
வாடகை வீட்டில் சசி என்பவர் குடியிருக்கிறார். இவரை பார்க்க, வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஹரிகரன்,22, அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, கனகராஜ் வீட்டில் பீரோவில் இருந்த 4 சவரன் நகையை திருடி சென்றார்.
புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் விசாரித்து, ஹரிகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து, நகை பறிமுதல் செய்யப்பட்டது.

