/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் வாகன சோதனை 12 கிலோ தங்கம் பறிமுதல்
/
பண்ருட்டியில் வாகன சோதனை 12 கிலோ தங்கம் பறிமுதல்
ADDED : ஜூலை 27, 2024 02:11 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் வாகன சோதனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைககளை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை சித்திரைச்சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சென்ற ஹூண்டாய் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 2 பைகளில் தங்க நகைகளாக இருந்தது. மேலும் நகை தொடர்பாக எந்தவித ஆவணங்களும் இல்லாததால் வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில்,மும்பையில் தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கி வரும் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தங்கம் எனவும், விற்பனை மாதிரிக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
அவர்கள் கொண்டு சென்ற தங்க நகை 12 கிலோ எனவும் அதன் மதிப்பு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் தெரிகிறது.
இதுகுறித்து பண்ருட்டி டி.எஸ்.பி., பழனி, இன்ஸ்பெக்டர் கண்ணன், ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலுார் வருமான வரித்துறை மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் வருமான வரித்துறையினர் தங்க நகைகளுக்கு முறையான ரசீது உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

