/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.1,36 லட்சம் அபராதம்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.1,36 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 18, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் கடலுாரில் போக்குவரத்து விதிகளை மீறிய 4 வாகனங்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடலுார் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் புதுநகர் காவல் நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, தகுதிச் சான்று இல்லாதது, கூடுதல் பள்ளி மாணவர்களை ஏற்றியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது என, போக்குவரத்து விதிகளை மீறியதாக1 ஆட்டோ, 1 கார்,2 ஆம்னி கார் ஆகிய 4 வாகனங்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.