/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்
/
3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்
3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்
3 வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை திட்டக்குடி அருகே துணிகரம்
ADDED : செப் 16, 2024 06:49 AM

திட்டக்குடி: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மூர்த்தி, 48; இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, அவரது மகளை கல்லுாரியில் சேர்ப்பதற்காக சென்னை சென்றார்.
நேற்று காலை அவரது தம்பி அருண்குமார்,42, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது.
அதேபோல், அருகிலுள்ள முருகானந்தம்,56, வேப்பூரில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றிருந்தார். நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் நகை திருடுபோனது.
அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாள் நகர் சின்னதுரை, 65, என்பவரின் வீட்டில் 2 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.
தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். ஒரே பகுதியில் மூன்று வீடுகளில் 15 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடுபோன பொருட்களின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும்.