sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுார் சத்திய தருமசாலை 158வது ஆண்டு துவக்க விழா

/

வடலுார் சத்திய தருமசாலை 158வது ஆண்டு துவக்க விழா

வடலுார் சத்திய தருமசாலை 158வது ஆண்டு துவக்க விழா

வடலுார் சத்திய தருமசாலை 158வது ஆண்டு துவக்க விழா


ADDED : மே 25, 2024 01:29 AM

Google News

ADDED : மே 25, 2024 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வடலுார் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை 158ம் ஆண்டு துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு, ராமலிங்க அடிகளார் கடந்த 1867ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி சத்திய தரும சாலையை நிறுவினார்.

இந்த விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், 158ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த ஏழு நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சிகள் நடந்தது. 158வது துவக்க விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணியளவில் தருமசாலையில் அகவல் பாராயணம் பாடப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 7:30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

ஏராளமான சன்மார்க்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து, காலை 9:00 மணியளவில் தரும சாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம், சத் விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை, திரு அருட்பா 6ம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடந்தது.

ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலுார் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us