/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது
/
வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது
ADDED : ஏப் 01, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அருகே வி.சி., நிர்வாகியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த எஸ்.புதுஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரசுராமன், 23; வி.சி., நிர்வாகி. இவர், செம்மேடு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, கூட்டமாக இருந்ததால் ஹாரன் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 24; அர்ஜூன், 19; இருவரும் பரசுராமனை தாக்கினர். காயமடைந்த பரசுராமன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, அசோக்குமார், அர்ஜூன் இருவரையும் கைது செய்தனர்.

