ADDED : ஜூலை 07, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் கஞ்சா பதுக்கிய 2 பேரை போலீசா் கைது செய்தனர்.
கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தேவனாம்பட்டிணத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த பால்சந்தர்,45; என்பவரை போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று, ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய கடலுார் முதுநகரை சேர்ந்த விக்னேஷ், 26; என்பவரை புதுநகர் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
