sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உள்ளிட்ட 2 பேர் கைது

/

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உள்ளிட்ட 2 பேர் கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உள்ளிட்ட 2 பேர் கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆர்.ஐ., உள்ளிட்ட 2 பேர் கைது


ADDED : ஜூன் 07, 2024 08:33 PM

Google News

ADDED : ஜூன் 07, 2024 08:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம், 40, தச்சு தொழிலாளி. இவர், தன் வீட்டின் பின் பகுதியில் மரப்பட்டறை வைக்க ெஷட் அமைத்துள்ளார். இதற்கு சொத்து வரி நிர்ணயிக்க கோரி, கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், அதற்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை நேற்று மாலை 3:30 மணிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரனிடம், செல்வம் வழங்கினார்.

அப்போது, மறைந்திருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், 55, மற்றும் உடந்தையாக இருந்த உதவியாளர் லட்சுமணன், 45, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அலுவலகம் முழுதும், மாலை 6:00 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இச்சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

இந்த அலுவலகத்தில் கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்க, லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் படி, கடந்தாண்டு மார்ச் 15ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us