ADDED : ஜூன் 10, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, லால்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனை,35; போலீசார் கைது செய்தனர்.
இதேப் போன்று, வடக்கு கொளக்குடி வாரசந்தை அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பழஞ்சநல்லுாரைச் சேர்ந்த அரிஹரசுதன்,32; என்பவரையும் கைது செய்தனர். இருவரிடமும் லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்ற பணம் 750 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.