sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேர் கைது

/

அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேர் கைது

அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேர் கைது

அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேர் கைது


ADDED : ஜூலை 01, 2024 06:47 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், பழைய வண்டிப்பாளையம் ஆலை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்,45; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. நகராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், நேற்று முன்தினம் இரவு புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெரு வழியாக பைக்கில் சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம கும்பல், புஷ்பநாதனை வழிமறித்து, சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பினர்.

இதற்கிடையே, புஷ்பநாதன் உடல் கடலுார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக நினைத்து, அவரது உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., வினர் அங்கு திரண்டனர். பின், கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆலை காலனியைச் சேர்ந்த அஜய்,21; நேதாஜி,23; பாலன் காலனியைச் சேர்ந்த சந்தோஷ்,24; ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆடுகள் வாங்கி விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட அஜய், நேதாஜி வீடுகளை, புஷ்பநாதன் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இச்சம்பவம் தொடர்பாக வண்டிப்பாளையம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us