sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்

/

கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்

கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்

கடலுாரில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது: பைக் பறிமுதல்


ADDED : ஆக 09, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 09, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே தொண்டமாநத்தத்தில் நள்ளிரவில் ஆடுகள் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் பொட்டவெளியை சேர்ந்தவர் பழனிவேல், 48; விவசாயி. இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகள் நேற்று முன்தினம் இரவு திருடுபோனது.

இந்நிலையில் கடலுார் முதுநகர் போலீசார் மணிகூண்டு அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி 3 பேர், பைக்கில் ஆடுகள் ஏற்றிக்கொண்டு வந்தனர்.

அவர்களை நிறுத்தி விசாரித்ததில், குறிஞ்சிப்பாடி அடுத்த ராமநாதன்குப்பம் முத்துக்குமரன் மகன் புருஷோத்தமன், 25; சின்னகாரைக்காடு ஜெயராமன் மகன் ஜெகதீஷ் , 22; சேடப்பாளையம் நாகம்பாள் பேட்டை சுப்ரமணி மகன் பிரகாஷ், 19; என்பதும், தொண்டமாநத்தத்தில் பழனிவேல் வீட்டில் ஆடுகளை திருடி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து புருஷோத்தமன், ஜெகதீஷ், பிரகாஷ் மூவரையும் கைது செயதனர். 5 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us