/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓசி சரக்கு கேட்டு ரகளை நெய்வேலில் 3 பேர் கைது
/
ஓசி சரக்கு கேட்டு ரகளை நெய்வேலில் 3 பேர் கைது
ADDED : ஜூலை 15, 2024 11:50 PM
நெய்வேலி: நெய்வேலி தனியார் பாரில், ஓசியில் மதுபானம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே தனியார் பார் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பாரில் ஓசியில் சரக்கு கேட்டு, 3 பேர், பாரில் இருந்த மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து பார் உரிமையாளர் கொடுத்த புகாரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோடிய 3 பேரை பிடித்தனர்.
அவர்கள் நெய்வேலி வட்டம் 21 புதுத்தெருவை சேர்ந்த வீரபாண்டியன் மகன் சுபாஷ் 20, வட்டம் 3 ஏ.கே.டி., பிரகாசம் சாலையை சேர்ந்த சிவசங்கரன் மகன் கிருஷ்ணா, 22, வட்டம் 10ல் உள்ள ஊசி தெருவை சேர்ந்த பெருமாள் மகன் குருமூர்த்தி, 21; என்பது தெரிய வந்தது.
நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.