sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை

/

பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை

பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை

பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தில் விருதை டாக்டருக்கு 3 ஆண்டு சிறை


ADDED : ஆக 06, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ் டாக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 'பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்திற்கு' எதிராக (கருவில் உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டறிவது) பரிசோதனை நடப்பதாக புகார் எழுந்தது.

அதன்பேரில், இணை இயக்குனர் உத்தரவின்பேரில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், அனுமதி பெறாமல் ஒரு ஸ்கேன் இயந்திரம் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2017, மார்ச் மாதம், சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர் கோப்பெருந்தேவி மீது பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ், விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேடர் அன்னலட்சுமி, பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ் டாக்டர் கோப்பெருந்தேவிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த தீர்ப்பு கூறினார். செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தார். அபராத தொகையை செலுத்திய டாக்டர் கோப்பெருந்தேவி, மாஜிஸ்திரேட் அனுமதியுடன் ஜாமின் பெற்றார்.

இதுகுறித்து தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறுகையில், 'இந்திய அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதை தடுத்திட, பாலின தேர்வை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, ஸ்கேன் செய்யும் இயந்திரம், அதன் எண்ணிக்கை, பரிசோதனை செய்யும் மருத்துவர் குறித்து மருத்துவத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

கடலுார் மாவட்டத்திலும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்ததால், தனியார் மருத்துவமனைகளை கண்காணித்து வந்தோம். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது புகார் வந்ததால், அங்கு ஆய்வு செய்தோம்.

அதில், பாலின தேர்வை கண்டறிந்ததை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அனுமதி பெறாமல் ஒரு ஸ்கேன் இயந்திரம் இருந்தது. அதையடுத்து, பாலின தேர்வை தடை செய்யும் சட்டத்தின் கீழ் டாக்டர் கோப்பெருந்தேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நெய்வேலியில் ஒரு தனியார் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்து, தண்டனை பெற்று தரப்பட்டது குறிப்பிடத்தக்கது' என்றார்.






      Dinamalar
      Follow us